ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் இந்துமதத்தை ஆதரிப்பதற்கு... டாக்டர் அம்பேத்கர்

#டாக்டர்அம்பேத்கர்,

 நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?

ஏனெனில்


1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது

2) அதுதான் என்னை சூத்திரன் என்றது

3) அதுதான் என்னை வேசிமகன் என்றது

4) அதுதான் என் தாயை வேசி என்றது

5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது

6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது

7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது

8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது

9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது

10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது

11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது

12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது

13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது

14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது

15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது

16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது

17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது

18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது

19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது

20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது

21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது

22) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது

23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது

24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது

25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது

26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது

27) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது

28) அதுதான் என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது

29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது

30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது

31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது

32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது

33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது

34) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது

35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது

36) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது

37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது

38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது

39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது

40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது

41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது

42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது

43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது

44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது

45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது

46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது

47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது

48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது

49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது

50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது

51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது

52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது

53) அதுதான்  விவசாயம் பாவத் தொழில் என்றது


இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.

தொடரும் ... அடுத்த பதிவில் சந்திக்கலாம்  அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன் நீங்கள் படித்து கொண்டு இருப்பது சமுக அக்கறை இணைய இதழ்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்