இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் தமிழனது வரலாறை சொல்ல வேண்டுமானால் அது இன்று நேற்று நடந்ததல்ல. ஆதியில் இறைவன் முதல் மனிதனை இந்த பூமியில் படைத்த கதையிலிருந்தே இந்த வரலாறு ஆரம்பிக்கிறது. ஆகவே உலக வரலாறே தமிழின வரலாறு என்பது தமிழ்நாட்டு அறிஞர் தவிற வேறு யாரும் ஏற்றுகொண்டிலர். காரணம் பைபிளின் கருத்துக்களை அதிகம் ஆய்ந்த அறிஞர்கள் தேட வேண்டிய இடத்தில் தேடாமல் தேவையில்லாத இடத்திலெல்லாம் தேடியதாலேயே தவறான முடிவுக்கு வந்துள்ளனர். காரணம் அவர்களுக்கு மற்ற மதங்களை தங்களுக்கு கீழ்படுத்த வேண்டும் என்னும் பேரவாவினாலும் ஏதேன் தோட்டத்தில் ஓடிய நதிகள் பாரசீகம் தொடங்கி அரபிதேசம் வரையிலும் இருப்பதாலும் ஏதேன் இருந்த இடம் மெசபத்தோமியா தொடங்கி அரபு தேசம் என நினைத்துக்கொண்டார்கள். கால வெள்ளோட்டம் இதையெல்லாம் தவறு என்றே மெய்பித்திருக்கிறது. பூமியில் மனுஷர் தோன்றிய இடம் லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம் என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. மேற்குலகமோ இதனை ஏற்றுக்கொண்டால் கருப்பர் இனமானது உயர்வாக சொல்லபடுமோ எனகருதி இதனை மறுப்பதுமன்றி பைபிள் பொய்யாக போய்விடுமோ என்ற ஐயத்தாலும் உண்மையை மறைக்கும் சதியை ...

தமிழர்கள் வந்தேறிகளே! Series 11

தமிழர் யார்? தமிழர் யாரென்ற கேள்விக்கு வரலாறை புரட்டுதல் அவசியமாகும் ஆகவே என்னோடு சேர்ந்து வரலாறை புரிந்து கொள்ள முயலுவோம். இன்றைய சூழலில் தமிழர் எனும் சொல்லே உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் சொல்லாக மலர இறையன் நம் முன் சென்று வெட்டி வீழ்ந்த மரமாகிய நம்மை அது வெட்டப்பட்ட இடத்தில் திரும்ப ஒட்ட வைக்கிறார் என்றே நாம் வைத்துக்கொள்ள இயலும். தனித்தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரா என ஒரு கேள்வியை கேட்டு தமிழரை நாம் அடையாளங்காண வேண்டிய நிலையில் இப்போது தள்ளப்பட்டு விட்டோம். ஏனெனில் தமிழர் எனும் போது தமிழர் அல்லாதோரும் தன்னை தமிழரெனவே நினைத்து கொண்டிருக்கின்றனர். இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட போவதில்லை. ஆனால் ஆட்டுதோல் போர்த்திய ஓனாய் போல என்ற பழமொழிக்கேற்ப இன்றைய சூழலில் தமிழின விரோதிகள் தங்களை தமிழரென அடையாளப்படுத்தி கொண்டதோடு தமிழனுக்காக போராடுகிறேன் குரல் கொடுக்கிறேன் என்று கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து பின்னர் சுயரூபத்தை காட்டிய கதையெல்லாம் நம் தமிழ் நாட்டில் உளது என்று நமது வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்துகிறது என்றே கொள்ள வேண்டும். ஏனெனில் உண்மையிலேயே தமிழினவிரோதியின் கூட...