தமிழர்கள் வந்தேறிகளே! Series 11
தமிழர் யார்?
தமிழர் யாரென்ற கேள்விக்கு வரலாறை புரட்டுதல் அவசியமாகும் ஆகவே என்னோடு சேர்ந்து வரலாறை புரிந்து கொள்ள முயலுவோம். இன்றைய சூழலில் தமிழர் எனும் சொல்லே உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் சொல்லாக மலர இறையன் நம் முன் சென்று வெட்டி வீழ்ந்த மரமாகிய நம்மை அது வெட்டப்பட்ட இடத்தில் திரும்ப ஒட்ட வைக்கிறார் என்றே நாம் வைத்துக்கொள்ள இயலும். தனித்தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரா என ஒரு கேள்வியை கேட்டு தமிழரை நாம் அடையாளங்காண வேண்டிய நிலையில் இப்போது தள்ளப்பட்டு விட்டோம். ஏனெனில் தமிழர் எனும் போது தமிழர் அல்லாதோரும் தன்னை தமிழரெனவே நினைத்து கொண்டிருக்கின்றனர். இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட போவதில்லை. ஆனால் ஆட்டுதோல் போர்த்திய ஓனாய் போல என்ற பழமொழிக்கேற்ப இன்றைய சூழலில் தமிழின விரோதிகள் தங்களை தமிழரென அடையாளப்படுத்தி கொண்டதோடு தமிழனுக்காக போராடுகிறேன் குரல் கொடுக்கிறேன் என்று கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து பின்னர் சுயரூபத்தை காட்டிய கதையெல்லாம் நம் தமிழ் நாட்டில் உளது என்று நமது வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்துகிறது என்றே கொள்ள வேண்டும். ஏனெனில் உண்மையிலேயே தமிழினவிரோதியின் கூட்டத்தில் பிறந்து வளர்ந்து அரசியலில் சதிமுறையில் உள்நுழைந்து சுய ஆதாயத்துக்காக தமிழ் வரலாறை திரிக்கும் அரசியல்வாதிகளால் அவதிபட்ட கதையெல்லாம் மாறி காமராசருக்கு பிறகு இரண்டு தமிழர்கள் தற்போது தமிழினத்தை ஆள்கிறார்கள் எனும்போது மிகவும் பெறுமை அடைகிறேன். அதே சமயம் அவர்கள் தமிழ் விரோதிகளின் கைகூலிகளானதை நினைத்து கவலையிலும் இருக்கிறேன். தமிழர்களை நாம் எந்த இலக்கணம் கொண்டு பிரிக்கலாம் என்று யோசிக்கும் போது தமிழ்தேசிய பேரியக்கம் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் பேரவை போன்ற இயக்கங்களை சார்ந்தவர்கள் வைக்கும் இலக்கணம் எமக்கு அந்தளவுக்கு திருப்திகரமானதாக இல்லை. ஏனெனில் அவர்கள் சாதியை கொண்டு தமிழர்களை கண்டுபிடிக்க முயன்று மறுபடியும் மனுஷ்மிருதியின் சாக்கடைக்கொண்டு தமிழர்களை அடையாளப்படுத்தும் முயற்சியில் பிராமணியத்தை உள்நுழைக்கிறார்களோ என அச்சப்பட வைக்கிறது. தமிழர் எனும் பதம் சமஸ்கிருதத்தில் திராவிடர் என மறுவியதாக ஈராஸ் அடிகளார் கூறுகிறார். அவரது இலக்கணத்தின் படி திராவிடர்கள் என்பவர்கள் தமிழர்களே ஆக திராவிடராக அடையாளப்படுத்துவதே சாலச்சிறந்ததா அல்லது தமிழரெனவே சொல்லுவதா என்பதில் குழப்பம் உள்ளது. இந்திய வரலாற்றில் ஆரியர்கள் என்பவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக உள்நுழைந்தவர்கள். அவர்கள் தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டு தான் தங்களது சந்ததியை பெருக்கியதாக ஆராய்ச்சி கூறுகிறது. ஆகவே இவர்களையும் கருத்தில் கொண்டு இந்தியரை நாம் கீழ்கண்டவாறு பிரிக்கிறோம்.
1.இந்தியர்கள்
2.ஆரியர்கள்
3.இந்தோஆரியர்கள்
இவர்களை நாம் நமக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால் இந்தியர்கள் ஆதியிலிருந்து வந்த தமிழ் வம்சாவழியினர் என்றும்,
ஆரியர்களை வெளிதேசங்களிலிருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் என்றும்,
அவர்களால் நடந்த இனக்கலப்பால் உருவான இனக்குழுக்களை அதாவது ஷத்திரிய வைஷியர்களை இந்தோ ஆரியர்களெனவும் வகையறியலாம்.
தமிழ்தேசியவாதிகளும், தமிழ் ஆர்வலர்களிலில் சிலரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனதில்லாதவர்களாய் இருக்க காரணம் என்னவெனில் இவர்களுக்கு தெலுங்கர்களையோ, கன்னடர்களையோ, மலையாளத்தவர்களையோ அனுசரிக்கும் மனப்பான்மை அற்று காணப்படுவதாலேயே இந்த புரிதல் இல்லாமையால் குழம்பிபோய் பிரிவினைவாதத்தை விதைக்கிறார்கள்.
ஆக போலி தமிழ்தேசியவாதிகளையும் தமிழ்ச்சிந்தனையாளர் பேரவையென்றும் தமிழ்நாடு தனிநாடு கோரிக்கை வைப்பவர்களையும் யாம் பிரிவினைவாத சக்திகளின் பட்டியலுக்குள்ளேயே வைக்க விரும்புகிறேன். கொஞ்சம் எண்ணிக்கையில் வளருவோம் பின்னர் தனிநாடு கோரிக்கையை பார்த்து கொள்ளலாம்.
இவர்கள் தமிழரை அடையாளப்படுத்த எடுத்த முயற்சிகள் சாதிசாக்கடையை குழப்பிவிட்டு சகதியிலே மீன் பிடிக்க போன கதையாய் மாறிவிட்டது கண்டு வருத்தமளிக்கிறது.
இவர்களைபோல தமிழரை பிரித்தல் தமிழரின் இன்றைய நிலமையிலிருந்து இன்னும் கீழ்நிலை நோக்கி செல்ல வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக