இடுகைகள்

நாக்கு தள்ளும் சித்திரை ஒன்றா ஆண்டு தொடங்கும்?

தைமுதலே ஆண்டு தொடங்குது மார்கழியில் ஆண்டு முடியுது சித்திரையல்ல தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லாதே சித்திரை ஒன்றில் நாக்கு தள்ளும் அக்கினி மாதம் ஆண்டு தொடங்குமா அறிவாளியே அறுவடைக்காய் காத்திருந்து நல்ல உணவு உண்ணும் நாளே ஆண்டின் தொடக்கம் இதை அறிவாய் நீயே

சித்திரை அல்ல தமிழ் புத்தாண்டு தைமுதலே தமிழ் புத்தாண்டு

படம்

எந்த மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு, பிறக்கிறது ?

எந்த மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு, பிறக்கிறது ? -------------------------------------------- தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரை”யா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணி மன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது ! இந்த நிலையில் நாளை, “சித்திரை” பிறக்கிறது. முந்தைய வழக்கத்தின் அடிப்படையில் சிலர் “புத்தாண்டு” வாழ்த்துத் தெரிவிக்கக் கூடும். ”தை” மாதமே புத்தாண்டு பிறந்து விட்டது. எனவே இப்போது “வாழ்த்து”க் கூற வேண்டிய தேவை எழவில்லை. இதன் தொடர்பாக வானறிவியல் விளக்கம், படத்துடன் தரப்படுகிறது ! 01. வான் அறிவியலின்படி (ASTRONOMY) , டிசம்பர் 21 அன்று, உலக உருண்டையின் தென்பகுதியில் (SOUTH HEMISPHERE) 23-1/2 பாகையில் உள்ள சுறவக் கோட்டிலிருந்து (மகர ரேகை) சூரியன், வடக்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த வடக்கு நோக்கிய நகர்வை, (பயணத்தை) ”பஞ்சாங்கம்” வடமுகச் செலவு (உத்தராயணம்) என்று சொல்கிறது. டிசம்பர் 21 என்பது சிலை (மார்கழி) மாதத்தின் 5 –ஆம் நாள் ! 02. வான் அறிவியலின் (ASTRONOMY...

மரபணு மாற்றமே வந்தது எனக்குள்ளே

மரபணு மாற்றமே வந்தது எனக்குள்ளே2 பாச அணுக்களும், நேச கணுக்களும் ஒன்றாய் சேர்ந்ததுவே-2 ஓ ஓ ஓ 1.கரையும் மேகங்களில் உன் முகத்தை பார்க்கிறேன் கூவும் குயிலிசையில் உன் குரலினை பிரிக்கிறேன் வாடும் என்னை வாட்டிடும் அன்பே தூவும் மழையில் சாரலும் நீயே அழகிய விடியல் நீ ஆசை நாயகியே-2 2.வாசனை திரவியமே மூலகூறுகள் தெரிகிறேன் அழகிய பூக்களில் நிறங்களை பிரிக்கிறேன் மூச்சு திணறும் கிணற்றினுள்ளே உயிர் காற்றாய் நீ உயிர் தந்தவளே நிறமுள்ள நறுமணமே நேச கண்மணியே-2 3.நயகரா வீழ்ச்சியில் விழுவதுன் கூந்தலோ குளிரை போக்கும் குளியல் வெது வெது வெண்ணீரூற்று நீ தாகம் தீர்திடும் பல்சுவையான ஊற்று நீ எப்போதும் திகட்டாத தித்திக்கும் கரும்பு நீ வளர்பிறை யானவளே ஒளிநிறை முழுநிலவே-2

கொத்துகுண்டு குபேரன் மஹிந்த ராஜபக்ஷ

இரத்த குளியலே இரத்த பொறியலே நீத்தியே நீந்தி களிச்சேன் தமிழன் இரத்தத்திலேயே கொத்து குண்டு போட்டு குலம் அழிச்ச குபேரா மொத்த நாடும் அழிஞ்சிடுச்சு குபேரா சொத்துபத்தும் குறைஞ்சிடுச்சு குபேரா மஹிந்த ராஜபக்சே மானங்கெட்ட ராஜபக்சே குலமழிச்ச குபேரனே கோடி கும்பிடு இப்போ நாடழிக்க வந்ததென்ன கோடி கும்பிடு பொருளாதார சீர்கேடு ஆச்சுதே நாடுதான் நாசமா போச்சுதே கோடிகும்பிடு நீ ஓடி போயிடு வேதி குண்டு போட்டழிச்ச ராஜபக்ச நீ வியாதியிலே போக போற ராஜபக்ச பாதியிலே போகபோற ராஜபக்ஷ நீ பாடையிலே போனா என்ன இராஜபக்ஷ

எங்கள் நாடு தமிழீழம்

எங்கள் நாடு தமிழீழம் எங்கும் ஆளும் தமிழர் குலம் வீழ்ந்தது மண்ணில் தனி ஈழம் எழுந்திடும் ஒருநாள் வீரமுடன்   வீழ்ந்திட்ட உதிரம்  முளைத்திடும் ஓர்நாள் துளிர்த்திடும் என்பது நம்பிக்கை ஆயிரந்தலைவ-னிருக்கட்டும் பிரபா-கரன் போல் வீரனில்லை ஆயிரம் பிரபா கரன் நாங்கள் மீண்டும் வெல்வோம்  பகைவர்தனை  இது சுந்தரநாயனின் ஆவல்  உங்களின் ஆவல் அறிய ஆவல் உடனே எழுதுங்கள் ஆவலுடன் ஆவலுடன் படித்திடவே ஆசையுடன் இருக்கின்றேன்.

உக்கிர ரஷ்யா ரத்தகறையாகும் உக்ரேன்

உ க்கிர ர ஷ்யா   ர த்தகறையாகும் உ க்ரேன் யுக்தியோ சக்தியோ  புத்தியோ கத்தியோ  வெற்றியின் முடிவில்  குருதிவாசமே மிச்சம் பக்தியோ சாதியோ மொழியோ இனமோ வெறியோ  வென்றபின்னர்  குருதிஓடையே மிஞ்சும் இது சத்தியம் நித்தியம்  பத்தியம் அது மனிதநேயம் குண்டுகளில் குளிக்கலாம் குருதிதனில் நீந்தலாம் எந்திரங்கள் முழங்கலாம் ஏகமாய் வெல்லலாம் குருதியாலே குதுகளம் நின்றிடாது எப்போதும் சதிகளால் வென்றதாய் சாத்திரங்கள் புரியலாம் ஆத்திரசுவடி என்று  அறிஞர்கள் சொல்லுவார் தோத்திரம் கூறுவோர்  மடிந்தபின் வருபவர் நிச்சயம் வெட்குவார் ஆகாத வெற்றி என்று மனிதரை மனிதரே  அழிப்பதோர் வெற்றியோ கொண்றபின் நின்று வாழ்வார் அவரை கொண்றிட முடியாது  ஒருநாளும் அவர் நினைவுகளை  எதிரியே இல்லை யப்பா எதிரிடை நிற்போரும் தேவையப்பா வழிகளும் உண்டப்பா ஞானம் உடையோரை தேடப்பா தவிர்க்கலாம் இழப்பு தானே தடைகளும் தேவையேதான் மலைவடிவில் தடைகளும் தேவையேதான் மலைஉயரம் நீ உயர  உதவும் கரந்தான் அந்த மலை  என உணர்ந்து நம்பிக்கை  சுமந்து முன்னேறிடுவாய் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் அதுவரை விடைபெறுவது உங்கள் கவிஞர் சுந்தரநாயன்