இடுகைகள்

கண்டேன் கனவு

எல்லார்க்கும் நினைத்தது போலவே நடந்திடாது ஆனால் எனக்கோ இன்று கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை. அது ஒரு மறக்க முடியா நிகழ்வு. சிறுபிள்ளை பிரயாயத்திற்கே என்னை இட்டு சென்றது. திடிரென்று ஒரு இறக்கை உள்ள விண்கலம் அது ஒருவாறு ஜெட் விமானம் போன்று இருந்தது அதன் நிறம் பச்சை அதன் மேற்பரப்பில் செடிகள் வளர்ந்தாற்போல தோற்றம். நான் பார்த்து வியக்கையில் விண்கலம் அதன் வாயிலை திறந்தது உள்ளே சென்றேன். வாகனம் புறப்பட தயாரானது ஒரு இருக்கையில் அமர்ந்து சீட் பெல்டை போட்டுக்கொண்டேன். விண்கலம் பறந்தது படபடத்தது இதயம். எங்கே போகிறேன் நான் . யார் என்னை அழைத்து செல்கிறார்கள். ஏதும் அறிகிலேன். ஒன்றும் புரியாதவனாக நடப்பதை மட்டும் கவனித்து கொண்டிருந்தேன். திடிரென்று வானத்தில் வட்டம் ஒன்று தோன்றியது .இது என்ன என்று யோசிப்பதற்குள் உள்ளே சென்றது எங்கள் விண்கலம் . யாருடன் பயனிக்கிறேன் ஏதும் தெரியவில்லையே. யாராவது என்னை கடத்தி செல்கிறார்களா அதுவும் புரியவில்லை குழப்பங்கள் சூழ படப்படப்பில்  இருந்தேன். அந்த வட்டத்திற்குள் நுழைந்தவுடன் விண்கலத்தின் வேகம் அதிகரித்தது. யாரோ தள்ளுவது போன்றும் என்னை இழுப்பதும் போன்றும் இருந்தத...

எட்டுத்தொகை பத்துபாட்டு பதினென்கீழ்கணக்கு நூல்களை எளிமையாக மனப்பாடம் செய்ய இப்பாடல்கள் உதவும்

எட்டுத்தொகை பாடல்களை எளிதில் ஞாபகம் வைக்க உதவும் பாடல் வரிகள்: “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்ற இத்திறத்த எட்டுத் தொகை 1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.பதிற்றுப்பத்து 5.பரிபாடல் 6.கலித்தொகை 7.அகநானூறு 8.புறநானூறு பத்துபாட்டு பாடல்களை எளிதில் ஞாபகம் வைக்க உதவும் பாடல் வரிகள்: முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சிமருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலைகடாந் தொடும் பத்து 1. திருமுருகாற்றுப்படை  2. பொருநாராற்றுப்படை,  3.சிறுபாணாற்றுப்படை  4. பெரும்பாணாற்றுப்படை 5. முல்லைப்பாட்டு  6. மதுரை காஞ்சி 7. நெடுநல்வாடை  8. குறிஞ்சிப்பாட்டு 9. பட்டினப்பாலை  10. மலைபடு கடாம். வேறு பெயர்கள்: *திருமுருகாற்றுப்படை-புலவராற்றுப்படை *பெரும்பாணாற்றுப்படை-பாணாறு. *முல்லைப்பாட்டு-நெஞ்சாற்றுப்படை. *குறிஞ்சிப்பாட்டு-பெருங்குறிஞ்சி. *பட்டினப்பாலை-வஞ்சி நெடும்பாட்டு. *மலைபடுகடாம்-கூத்தராற்றுப்படை. பதினென்கீழ்கணக்கு நூல்களை மனப்பாடம் செய்ய உதவும் பாடல் வரிகள்: நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பா...

நாக்கு தள்ளும் சித்திரை ஒன்றா ஆண்டு தொடங்கும்?

தைமுதலே ஆண்டு தொடங்குது மார்கழியில் ஆண்டு முடியுது சித்திரையல்ல தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லாதே சித்திரை ஒன்றில் நாக்கு தள்ளும் அக்கினி மாதம் ஆண்டு தொடங்குமா அறிவாளியே அறுவடைக்காய் காத்திருந்து நல்ல உணவு உண்ணும் நாளே ஆண்டின் தொடக்கம் இதை அறிவாய் நீயே

சித்திரை அல்ல தமிழ் புத்தாண்டு தைமுதலே தமிழ் புத்தாண்டு

படம்

எந்த மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு, பிறக்கிறது ?

எந்த மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு, பிறக்கிறது ? -------------------------------------------- தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரை”யா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணி மன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது ! இந்த நிலையில் நாளை, “சித்திரை” பிறக்கிறது. முந்தைய வழக்கத்தின் அடிப்படையில் சிலர் “புத்தாண்டு” வாழ்த்துத் தெரிவிக்கக் கூடும். ”தை” மாதமே புத்தாண்டு பிறந்து விட்டது. எனவே இப்போது “வாழ்த்து”க் கூற வேண்டிய தேவை எழவில்லை. இதன் தொடர்பாக வானறிவியல் விளக்கம், படத்துடன் தரப்படுகிறது ! 01. வான் அறிவியலின்படி (ASTRONOMY) , டிசம்பர் 21 அன்று, உலக உருண்டையின் தென்பகுதியில் (SOUTH HEMISPHERE) 23-1/2 பாகையில் உள்ள சுறவக் கோட்டிலிருந்து (மகர ரேகை) சூரியன், வடக்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த வடக்கு நோக்கிய நகர்வை, (பயணத்தை) ”பஞ்சாங்கம்” வடமுகச் செலவு (உத்தராயணம்) என்று சொல்கிறது. டிசம்பர் 21 என்பது சிலை (மார்கழி) மாதத்தின் 5 –ஆம் நாள் ! 02. வான் அறிவியலின் (ASTRONOMY...

மரபணு மாற்றமே வந்தது எனக்குள்ளே

மரபணு மாற்றமே வந்தது எனக்குள்ளே2 பாச அணுக்களும், நேச கணுக்களும் ஒன்றாய் சேர்ந்ததுவே-2 ஓ ஓ ஓ 1.கரையும் மேகங்களில் உன் முகத்தை பார்க்கிறேன் கூவும் குயிலிசையில் உன் குரலினை பிரிக்கிறேன் வாடும் என்னை வாட்டிடும் அன்பே தூவும் மழையில் சாரலும் நீயே அழகிய விடியல் நீ ஆசை நாயகியே-2 2.வாசனை திரவியமே மூலகூறுகள் தெரிகிறேன் அழகிய பூக்களில் நிறங்களை பிரிக்கிறேன் மூச்சு திணறும் கிணற்றினுள்ளே உயிர் காற்றாய் நீ உயிர் தந்தவளே நிறமுள்ள நறுமணமே நேச கண்மணியே-2 3.நயகரா வீழ்ச்சியில் விழுவதுன் கூந்தலோ குளிரை போக்கும் குளியல் வெது வெது வெண்ணீரூற்று நீ தாகம் தீர்திடும் பல்சுவையான ஊற்று நீ எப்போதும் திகட்டாத தித்திக்கும் கரும்பு நீ வளர்பிறை யானவளே ஒளிநிறை முழுநிலவே-2

கொத்துகுண்டு குபேரன் மஹிந்த ராஜபக்ஷ

இரத்த குளியலே இரத்த பொறியலே நீத்தியே நீந்தி களிச்சேன் தமிழன் இரத்தத்திலேயே கொத்து குண்டு போட்டு குலம் அழிச்ச குபேரா மொத்த நாடும் அழிஞ்சிடுச்சு குபேரா சொத்துபத்தும் குறைஞ்சிடுச்சு குபேரா மஹிந்த ராஜபக்சே மானங்கெட்ட ராஜபக்சே குலமழிச்ச குபேரனே கோடி கும்பிடு இப்போ நாடழிக்க வந்ததென்ன கோடி கும்பிடு பொருளாதார சீர்கேடு ஆச்சுதே நாடுதான் நாசமா போச்சுதே கோடிகும்பிடு நீ ஓடி போயிடு வேதி குண்டு போட்டழிச்ச ராஜபக்ச நீ வியாதியிலே போக போற ராஜபக்ச பாதியிலே போகபோற ராஜபக்ஷ நீ பாடையிலே போனா என்ன இராஜபக்ஷ