இடுகைகள்

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் தமிழனது வரலாறை சொல்ல வேண்டுமானால் அது இன்று நேற்று நடந்ததல்ல. ஆதியில் இறைவன் முதல் மனிதனை இந்த பூமியில் படைத்த கதையிலிருந்தே இந்த வரலாறு ஆரம்பிக்கிறது. ஆகவே உலக வரலாறே தமிழின வரலாறு என்பது தமிழ்நாட்டு அறிஞர் தவிற வேறு யாரும் ஏற்றுகொண்டிலர். காரணம் பைபிளின் கருத்துக்களை அதிகம் ஆய்ந்த அறிஞர்கள் தேட வேண்டிய இடத்தில் தேடாமல் தேவையில்லாத இடத்திலெல்லாம் தேடியதாலேயே தவறான முடிவுக்கு வந்துள்ளனர். காரணம் அவர்களுக்கு மற்ற மதங்களை தங்களுக்கு கீழ்படுத்த வேண்டும் என்னும் பேரவாவினாலும் ஏதேன் தோட்டத்தில் ஓடிய நதிகள் பாரசீகம் தொடங்கி அரபிதேசம் வரையிலும் இருப்பதாலும் ஏதேன் இருந்த இடம் மெசபத்தோமியா தொடங்கி அரபு தேசம் என நினைத்துக்கொண்டார்கள். கால வெள்ளோட்டம் இதையெல்லாம் தவறு என்றே மெய்பித்திருக்கிறது. பூமியில் மனுஷர் தோன்றிய இடம் லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம் என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. மேற்குலகமோ இதனை ஏற்றுக்கொண்டால் கருப்பர் இனமானது உயர்வாக சொல்லபடுமோ எனகருதி இதனை மறுப்பதுமன்றி பைபிள் பொய்யாக போய்விடுமோ என்ற ஐயத்தாலும் உண்மையை மறைக்கும் சதியை ...

தமிழர்கள் வந்தேறிகளே! Series 11

தமிழர் யார்? தமிழர் யாரென்ற கேள்விக்கு வரலாறை புரட்டுதல் அவசியமாகும் ஆகவே என்னோடு சேர்ந்து வரலாறை புரிந்து கொள்ள முயலுவோம். இன்றைய சூழலில் தமிழர் எனும் சொல்லே உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் சொல்லாக மலர இறையன் நம் முன் சென்று வெட்டி வீழ்ந்த மரமாகிய நம்மை அது வெட்டப்பட்ட இடத்தில் திரும்ப ஒட்ட வைக்கிறார் என்றே நாம் வைத்துக்கொள்ள இயலும். தனித்தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரா என ஒரு கேள்வியை கேட்டு தமிழரை நாம் அடையாளங்காண வேண்டிய நிலையில் இப்போது தள்ளப்பட்டு விட்டோம். ஏனெனில் தமிழர் எனும் போது தமிழர் அல்லாதோரும் தன்னை தமிழரெனவே நினைத்து கொண்டிருக்கின்றனர். இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட போவதில்லை. ஆனால் ஆட்டுதோல் போர்த்திய ஓனாய் போல என்ற பழமொழிக்கேற்ப இன்றைய சூழலில் தமிழின விரோதிகள் தங்களை தமிழரென அடையாளப்படுத்தி கொண்டதோடு தமிழனுக்காக போராடுகிறேன் குரல் கொடுக்கிறேன் என்று கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து பின்னர் சுயரூபத்தை காட்டிய கதையெல்லாம் நம் தமிழ் நாட்டில் உளது என்று நமது வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்துகிறது என்றே கொள்ள வேண்டும். ஏனெனில் உண்மையிலேயே தமிழினவிரோதியின் கூட...

அச்சுருத்தும் கொரொனா அயராமல் உழைக்கும் 108 அடிமாடுகள்.

படம்
கொரானாவை கண்டு பயப்படாதோர் எவருமே இல்லை எனலாம். ஊரே பயப்படும் வேளையில் பயப்படாமல் இன்று வேலை செய்பவர்கள் யாரென்று தெரியுமா? அவர்கள் தியாகத்துக்கே பேர்போன 108 அவசர மருத்துவ உதவியாளரும், அவரோடு பணிபுரியும் 108வாகன ஓட்டுனர்களும் தான். அவசர ஊர்தியை போக்குவரத்து நெரிசலில் ஓட்டி மருத்துவமனைக்கு சீக்கிரமாக செல்லும் ஒட்டுநர்களும் உயிருக்கு போராடும் மக்களை காப்பாற்றி முதலுதவி செய்யும் அவசர மருத்துவ உதவியாளர்களும் தங்கள் உயிரையே பணயம் வைத்து உங்களின் உயிரை காக்க போராடி வருகின்றனர். உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. உங்கள் உயிரை காப்பாற்ற அவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். உயிரை பணயம் வைத்து அதிவேகம் ஓட்டிச்சென்று காப்பாற்றும் அவர்கள் செய்வது பணி பாதுகாப்பு இல்லாத வேலை. பணி நிரந்தரம் இல்லா வேலை. பலரும் இதனை யோசிப்பதில்லை. இவர்கள் நமக்காக உழைக்காவிடில் இங்கு எத்தனை உயிர்களை இந்தியா இழக்க வேண்டிவரும் என்பதை யாருமே சிந்திப்பதில்லை. மழையிலும் குளிரிலும் அவசர ஊர்தியே இவர்களது அடைக்கலம். வெயிலிலும் வாகனத்துக்குள்ளேயே வேகும் இந்த...

கீழடி நாகரீகத்தால் பலமிலந்து போகும் பிராமணியம் series 10

கீழடி என்ற அரும்பெரும் பொக்கிஷம் தமிழரின் நாகரீகத்தை எடுத்து சொல்லும் ஒரு சான்றாகும். கீழடி என்றாலே சிலருக்கு அடிவயிற்றில் புளி கரைத்தார் போல பதறுகின்றனர். காரணம் நசுக்கப்பட்ட நமது நாகரீகம் நாகப்பாம்பாய் படமெடுத்து ஆடுகிறது. எத்தனை தலைமுறைகளாய் நச்சு கலந்து புகட்டிய பாடமெல்லாம் தவிடு பொடியானது. திரித்த வரலாறுகளை தவறாக மாற்றிவிட்டது. காரணம் ஒரே ஒரு சொல் தான் அதுதான் கீழடி என்னும் பேரிடியாய் பிராமணியத்தை நொறுக்கும் ஆயுதமாக மாறியது. இன்றைய நவநாகரீக உலகில் தமிழர் சமுதாயம் தான் யாரென்ற அறிவே இல்லாமல் முட்டாள் சமுதாயமாக மாறி இருக்கிறது. தமிழர்கள் யாவரும் பிராமணரின் மூத்திரம் குடிப்பவர்கள் ஆனார்கள். அதில் என்ன ருசி கண்டார்களோ தெரியவில்லை பிரமண மூத்திரம் ஆஹா தேவாமிர்தம் என்று பெருமைபடுபவர்கள் தான் இன்று உளர். கொடுமையிலும் கொடுமை  வேதனையிலும் வேதனை தமிழனெல்லாம் இன்று தரையிலே தராதரமற்றவனெல்லாம் அரியாசனத்திலே! ஐயகோ என்ன ஒரு கால கொடுமை... எங்கிருந்தோ ஒண்ட வந்த பிடாரியெல்லாம் ஊர்பிடாரி ஆகி தாய்மண்ணில் பிறந்தவனெல்லாம் சூத்திரனாகிவிட்டான். ஈராயிரம் வருடமாக ஒரு அடிமையாக வாழ்ந்த தமிழராகிய நாம் ந...

சிறந்த அங்கிகாரம் கிடைத்தது

படம்
எனது படைப்பு சங்கே முழங்கு பத்திரிக்கையில் வந்திருக்கிறது . சிறந்த அங்கிகாரம் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்... சங்கே முழங்கு மாத இதழுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

அடியவன் ஆனேன் series 9

அடியவன் ஆனேன் இறைவனுக்கல்ல என்னை மட்டுபடுத்தி ஆள்பவனுக்கு சிறியவன் ஆனேன் பணத்திலல்ல தலையில் இருந்து பிறவாததாலே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை இதை ஏற்றுக்கொள்வாரும் இல்லை பிறந்தவன் எவரும் சாதிக்குள்ளே அனைவரும் இங்கு மலத்துக்குள்ளே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆரிய சிந்தை அனாரியன் அழிக்குது வேத சிந்தை சாதியை வளர்க்குது மனித மூளை இதையும் நம்புது இளைத்தவர்களை ஏமாற்றி பிழைக்குது. என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆடு மேய்த்து வந்தவன் இன்று எங்களை ஆள்கிறானே கேடுக்கெட்ட ஜென்மங்கள் இன்றிதை ஏற்று கொண்டனரே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே வந்தேரி பிராமண கூட்டமே - இன்று தமிழனை வந்தேறி என்குதே நாதாரி ஆரிய கூட்டமே-மக்களை நடைபிணமாக்கி வச்சிட்டே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே சிந்தனை குருடாய் மாற்றியே  சி...

காணக ரீங்கார புலமை

காணகத்தே என் கால்கள் நிற்கையிலே ரீங்கார பறவைகளின் சங்கீத புலமை கேட்டே இன்னோர் அடியெடுகையிலே அப்பளமாய் சருகும் நொருங்கும் சத்தம் கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே காலைபனி கைகோர்த்து இலைவழியே ஒழுகுங்சத்தம் கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே சில்லென்ற வாடை காற்று வாட்டுகின்ற வேளையிலே வாயிலே உணவோடு கூட்டின்மேலே சிட்டு பார்த்து குஞ்செல்லாம் வாய்பிளந்து ஆசையோடு அம்மா தருவாளோ உணவென ஏங்கி ஓங்கி ஒலிக்கும் சலனம் கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே இன்பமான அருவியொன்று தூரத்தில் விழும் ஓசை கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே எச்சிலே ஊரும் வண்ணம் கிளியொன்று கடித்திட்ட மாங்கனி அமுதாய் சொட்டுகையில் கீழே அணில் கடித்த பலாசுளையிலே அதுபட்டு வழிந்தொரு பூவினுள் விழுந்ததே என்னே அச்சுவை சுவைத்துவிட்டு நகருகையிலே குரங்கொன்று தென்னையிலே 'பொத்'தென்று போட்டதுவே குரங்கது வருவதற்குள்ளே குடித்துவிட்டேன் இளநீரை  திருப்தியாய் காணகமே அங்கு விட்டுவந்தேன் என் மனமே